tamilnadu

img

முன்பு பிரக்யா, இப்போது உஷா கோட்சே தேசபக்தர்தானாம்..

புதுதில்லி:
“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர்தான் நாதுராம் கோட்சே” என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறினார். இதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். “இந்து என்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது; தீவிரவாதியாக இருப்பவர் இந்துவாக இருக்க முடியாது” என்று பிரதமர் மோடி, பதிலளித்தார். 

ஆனால், பாஜக எம்.பி.யும், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், மோடியைப் போல பூசி மெழுகாமல், “கோட்சே ஒரு தேசபக்தர்” என்று நேரடியாகவே விஷயத்தைப் போட்டு உடைத்தார். இதனால் ஆடிப்போன பாஜக தலைமை, பிரக்யா சிங் கருத்தை ஏற்க முடியாது என்றும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் பம்மாத்து ஆடியது. பிரக்யா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேடிக்கை காட்டியது.

இந்நிலையில்தான், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் பாஜக எம்எல்ஏ-வான உஷா தாக்கூரும் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியுள்ளார். “ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் தேசத்தை பற்றி அக்கறை கொண்டவர் கோட்சேதான். மகாத்மா காந்தியை கொலை செய்யும் அந்த முடிவை அவர் எந்த சூழ்நிலையில் எடுத்திருப்பார் என்பது கோட்சேவுக்கு மட்டுமே தெரியும். அதனால் நாம் அதுகுறித்து எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஆனால், அவர் ஒரு தேசியவாதி என்பது மட்டும் உண்மை” என்று புகழ்ந்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி இருக்கும் நிலையில், உஷா தாக்குர் தொடர்பான வீடியோக்கள், வெட்டி ஒட்டப்பட்ட ஒன்றாகும் என்று பாஜக மழுப்பியுள்ளது.