tamilnadu

img

கொரோனா நோயாளிகளில் 5 சதவீதம் பேருக்கே தீவிர சிகிச்சை தேவை கொரோனா கட்டுப்பாட்டுக்குழு தலைவர் தகவல்

புதுதில்லி,மே 24- நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 10 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கொரோனா நோயாளிகளில்  5 சதவீதம் பேருக்கே தீவிர சிகிச்சை தேவை என்றும்  கொரோனா கட்டுப்பாட்டுக் குழு தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினரும், கொரோனா கட்டுப் பாட்டுக்குழு தலைவருமான டாக்டர் வி.கே. பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் கொரோனா பரவிய சமயத்தில் கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க நம்மிடம் எந்த மருத்துவமனையும்  இல்லை. ஆனால் இப்போது விரிவான வசதி களை ஏற்படுத்தியுள்ளோம். கொரோனா நோயாளிகளுக்கு என்று பிரத்யேகமாக சிகிச்சை அளிப்பதற்கு 1093 மருத்துவமனைகள்  செயல்பட்டு வருகின்றன. இத்துடன் 2 ஆயிரத்து 402 சுகாதார மையங்கள், 7 ஆயி ரத்து 13 கொரோனா நோயாளிகள் கவ னிப்பு மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

இந்த மருத்துவமனைகளில் நேரடி யாக சிகிச்சை அளிக்க 1 லட்சத்து 85 ஆயிரத்து 306 படுக்கைகள் உள்ளன.  அவற்றில் 31 ஆயிரத்து 250  படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவு ஆகும். கொரோனா நோயாளி கவனிப்பு மையங்களில் மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரம் படுக்கைகள் உள்ளன.  மொத்தத்தில் அனைத்து பிரிவுகளையும் சேர்த்து 9 லட்சத்து 74 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இத்தனை எண்ணிக்கையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். கொரோனா நோயாளிகளில் சுமார் 5 சதவீதம் பேருக்கே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. 80 சதவீதம் பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே சிகிச்சை போதுமானதாக உள்ளது. தற்போது நோயாளிகள் குணமாகுதல் விகிதம் 41 சதவீதமாக உள்ளது. நாட்டில் இதுவரை 28 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.