கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதைத் தடுக்க வருகிற ஏப்ரல் 14,வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாடு தழுவிய முடக்க காலத்தில் நோய் தடுப்பு மற்றும் மக்கள் வாழ்வு இரண்டு முனைகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து கவனம் செலுத்த வேண்டியது உடனடிக் கடமையாகும் .
இந்த வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பினாய் விஸ்வம் (கேரளம்) கே.சுப்பராயன் (திருப்பூர்) எம்.செல்வராசு (நாகபட்டினம்) ஆகிய மூவரும் அவர்களது ஒரு மாத ஊதியத்தை அந்தந்த மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா அறிவித்துள்ளார்