tamilnadu

img

எண்ணெய், எரிவாயு கிணறு தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லையாம் விதியை நீக்கி மத்திய அரசு அபாய அறிவிப்பு

புதுதில்லி,ஜன.19-  எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் தோண்டுவதற்கு சுற்றுச்சூழல்  அமைப்பின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதியை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங் களுக்கும் விவசாய விளை நிலங் களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு கள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடல்பரப்பிலும் நிலப் பரப்பிலும் டிரில்லிங் மூலம் எண்ணெய், எரிவாயு கிணறுகளை தோண்டும் நிறுவன ங்கள் இதுவரை ஏ- பிரிவு எனப்படும் அதிக பட்சமான சுற்றுச்சூழல் நிபந்தனைகளை கடைப்பிடித்து வந்தன. இந்த விதி நீக்கத்தால் இனி இந்தப் பிரச்சனை மாநில அரசுகளின் கவனத்துக் குரியதாக மாறும். எண்ணெய் எரிவாயு  ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவன ங்களுக்கு  இஐஏ எனப்படும்  சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை தேவையில்லை. 

;