tamilnadu

img

நிர்பயா பாலியல் வன்கொலை 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்

புதுதில்லி, மார்ச் 20- தில்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும்  திகார் சிறை யில் வெள்ளிக்கிழமையன்று அதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிடப் பட்டனர்.  தில்லியில் 2012 டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயா என்பவரை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து, சாலையில் தூக்கி வீசினர்.  படுகாயமடைந்த நிலையில் அவர் தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.பின்னர் சிங்கப்பூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி யையும் கொந்தளிப்பையும் உரு வாக்கிய இச்சம்பவத்தைக் கண்டித் தும் குற்றவாளிகளுக்கு கடும் தண் டனை கோரியும் மாணவர்கள், பொது மக்களின் போராட்டங்கள் நடை பெற்றன. 

இந்த வழக்கில் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (31) ஆகி யோர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன், சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் விடு தலை செய்யப்பட்டார்.  தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளும் தண்ட னையிலிருந்து தப்பிப்பதற்கு ஒருவர் பின் ஒருவராக நீதிமன்றத்தில் மேல் முறையீடு, மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்வதும் குடியரசுத் தலை வருக்கு கருணை மனுக்கள் தாக்கல் செய்வதும் என தொடர்ந்தனர். குற்ற வாளிகளுக்கு சட்டரீதியான அனை த்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. ஆனால் மரண தண்டனை ரத்து செய் யப்படவில்லை. குற்றவாளிகளுக் கான தூக்குத்தண்டனை  இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதி யாக மார்ச் 20-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தண்டனை என்று நீதி மன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு அவசர வழக்காக மார்ச் 20 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட் டது. அந்த மனுவையும் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதி மன்றமும் நேற்று நள்ளிரவில் தள்ளு படி செய்தது. இதனையடுத்து 4 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. மார்ச் 20 அதி காலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறையில் தூக்கி லிடப்பட்டனர்.