tamilnadu

img

சொப்னா, சந்தீபுக்கு என்ஐஏ காவல் நீட்டிப்பு திருவனந்தபுரத்தில் சரித்திடம் விசாரணை

திருவனந்தபுரம்:
தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்தின் வாக்குமூலம் பெற அவரை திருவனந்தபுரத்துக்கு என்ஐஏ அதிகாரிகள் அழைத்து வந்தனர். சொப்னா, சந்தீபுக்கு செவ்வாயன்று நிறைவடைந்த என்ஐஏ காவல் நீட்டிக்கப்பட்டது. கொச்சியிலிருந்து செவ்வாயன்று காலை சரித்தை திருவனந்தபுரம் பேரூர்கடை போலீஸ் கிளப்புக்கு அழைத்து வந்தனர். இரண்டு நாட்கள் முன்புதான் சொப்னாவையும் சந்தீபையும் திருவனந்தபுரம் அழைத்துவந்து சாட்சியங்கள் சேகரித்தனர். இப்போது இரண்டாம் கட்ட சாட்சிய சேகரிப்பு நடைபெறுகிறது. இந்நிலையில், என்ஐஏ விசாரணைக்காக சொப்னா சந்தீபின் காவலை வெள்ளிக்கிழமை வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இவர்களது ஜாமீன் மனு வெள்ளியன்று விசாரணைக்கு வருகிறது. 

;