tamilnadu

img

இஸ்லாமியர்களை மிரட்டும் நவ நிர்மாண் சேனா

மும்பை, பிப்.5- குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங் கள் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், இப்போரா ட்டத்தில் பங்கேற்போர் மீது தாக்குதல் நடத்தும் வேலையில் இந்துத்துவா கூட்டம் இறங்கியுள்ளது. தில்லி ஜாமியா மற்றும் ஷாகீன் பாக் போன்ற இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடுவோர் மீது, இந்துத் துவா கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.  இந்நிலையில், ராஜ் தாக்கரே தலைமையிலான மகா ராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி, இஸ்லாமியர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் பேனர்களை வைத்துள்ளது. “பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தவரின் ஊடுரு வலுக்கான நாடு இந்தியா அல்ல” என்ற முழக்கத்துடன் பேரணி அறிவித்துள்ள நவ நிர்மான் சேனா, அதுதொடர்பான விளம்பர பேனரில், “பாகிஸ்தான் - வங்காளதேசிகளே இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். இல்லையெனில், எங்கள் ஸ்டைலில் வெளியேற்றப்படுவீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.