tamilnadu

img

மோடி எங்களைவிட திறமையான வியாபாரி... ஒப்புக் கொள்கிறோம்!

புதுதில்லி:
பிரதமர் மோடி, காங்கிரஸ்காரர்களை விட ஒரு திறமையான விற்பனையாளர்தான்;அதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம் என்று காங்கிரசின் மக்களவைக்குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில், ஆதிர் ரஞ்சன்சவுத்ரி இதுபற்றி மேலும் பேசியிருப்பதாவது:“பிரதமர் மீது பலரும் புகழ்மழை பொழிந்து வருகின்றனர். அதை இத்துடன்
முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இதற்கு மேல்போனால், மோடியால் நீந்தி வர முடியாது. தனது ஆட்சியின் மூலம் இந்தியா புகழ் அடைந்துள்ளதாக, மோடி ஒருமுறை கூறினார். அப்படியானால், வாஜ்பாய் ஆட்சிமோசமானது என்று அவர் கூற வருகிறாரா,என்று கேட்க விரும்புகிறேன். இந்த தேர்தலில், நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம். அது உண்மை. ஆனாலும் எப்போதும் போல மக்கள் பணியை நாங்கள் தொடர்வோம். இங்கே இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். அது என்னவென்றால், காங்கிரசை விட பன்மடங்கு திறமையான விற்பனையாளர் மோடி என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். தரமற்ற பொருளை மக்களிடம் விற்று, அவரால் ஆட்சியமைக்க முடிந்துள்ளது என்றால், அவர் திறமையான வியாபாரிதான். ஆனால், காங்கிரசைப் பாருங்கள்: தரமான பொருள் இருந்தும் அதனை விற்பனை செய்வதற்கான திறமையின்மையால் இன்று தோற்று நிற்கிறது.இவ்வாறு அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியுள்ளார்.