tamilnadu

img

பாரத் பெட்ரோலியத்தை 4-ஆவது முறையாக ஏலம்விட்ட மோடி அரசு... 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை அடிமாட்டு விலைக்கு ‘அமுக்க’ பெருமுதலாளிகள் சூழ்ச்சி!

புதுதில்லி:
நிதிப்பற்றாக்குறையை சரிக்கட்ட, பொதுத்துறை நிறுவனங்களில் அரசுக்கு இருக்கும் பங்குகளை விற்பது என்பதும், இதன்மூலம் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி நிதியாதாரத்தைத் திரட்டுவது என்பதும், மத்திய பாஜக அரசு 2020 - 21 பட்ஜெட்டில் அறிவித்த விஷயமாகும்.

அதாவது, 2021 மார்ச் மாதத்திற் குள், ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC)மற்றும் ஐடிபிஐ (IDBI) வங்கி ஆகியவற்றில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளை தனியார் முதலாளிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ. 90 ஆயிரம் கோடியையும், ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பொரேசன் லிமிடெட் (BPCL),கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (CONCOR), ‘ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ (SCI) மற்றும் ‘ஏர் இந்தியா’ (Air India) உள்ளிட்டவற்றின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடியையும் திரட்டுவது மத்திய அரசின் திட்டம். இதற்கான நடவடிக்கைகளை மோடிஅரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், நாட்டின் 2-ஆவதுபெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சில்லரை எரிபொருள் விற்பனைநிறுவனமான ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (BPCL) நிறுவனத்தை, தனியாருக்கு கொடுப்பதற்கான ஏல நடவடிக்கைகளை நான்காவது முறையாக மோடி அரசு நடத்தி முடித்துள்ளது.

ஏற்கெனவே மூன்றுமுறை ஏல நடவடிக்கைகளை மேற்கொண்டும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்குவதற்கு யாரும் வரவில்லை. அதைத் தொடர்ந்தே 4-ஆவது முறையாக ஏலத்தை அறிவித்து, நவம்பர் 16-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று கடைசி தேதியையும் மோடி அரசு இறுதி செய்திருந்தது. ஆனால், இந்த முறையும் எதிர்பார்த்தபடி பன்னாட்டு பெருநிறுவனங் கள் எதுவும் பிபிசிஎல் நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு முன்வரவில்லை என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.3 முதல் 4 விருப்ப விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டாலும், அந்த நிறுவனங்கள் சிறியவை என்று கூறப்படுகிறது.பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு, பிரிட்டன் நாட்டின் ‘பிபி’ (BP) நிறுவனம், பிரான்ஸ் நாட்டின் ‘டோட்டல்’, சவூதியின் ‘ஆரம்கோ’, ரஷ்யாவின் ‘ராஸ்நெஃப்ட்’ ஆகிய நிறுவனங்கள்போட்டிபோடும் என்பதுதான் மோடிஅரசின் எதிர்பார்ப்பாகும். அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதல்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனமும் களத்தில் இறங்கும் என்று கருதியது.

ஆனால், இவர்கள் யாரும், பிபிசிஎல்ஏல விண்ணப்பம் அளிப்பதற்கு கடைசிநாளான நவம்பர் 16 வரை விண்ணப் பிக்கவில்லை. 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்றால் அரசிடம் இருக்கும் 52.98 சதவிகிதப் பங்குகளை இன்றையவிலைப்படி 47 ஆயிரத்து 430 கோடி ரூபாய்க்கும், பொதுச் சந்தையில் இருக்கும் 26 சதவிகிதப் பங்குகளை 23 ஆயிரத்து 276 கோடி ரூபாய்க்கும் வாங்க வேண்டும். ஆனால், இவ்வளவு தொகை கொடுத்து பிபிசிஎல் நிறுவனத்தை வாங்குவதற்கு மேற்கண்ட பன்னாட்டு நிறுவனங்கள் தயாரில்லை என்று கூறப்படுகிறது. அடிமாட்டு விலைக்கு கிடைத்தால் வாங்கலாம் என்பது அவர்களின் எண்ணம். எனவே, பேரத்தைப்படிய வைப்பதற்காக, ஏல விண்ணப்பமேஅளிக்காமல் இந்த பெரிய நிறுவனங் கள் திட்டமிட்டே ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. தங்களைத் தவிர்த்து, நினைத்தாலும் கூட  வேறு யாரும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்க முடியாது என்பதாலும், எப்படியும் தங்களைத்தான் கடைசியில் தேடி வந்தாக வேண்டும் என்ற இறுமாப்பிலும் ரிலையன்ஸ், ஆரம்கோ, பிபி உள்ளிட்ட நிறுவனங்கள் இருப்பதாகவும் கருதப்படுகிறது.மத்திய மோடி அரசுக்கும் இது தெரியும் என்றாலும், அதனை வெளிக்காட்டாமல், தற்போதைக்கு வந்துள்ள மூன்று, நான்கு விண்ணப்பங்களை ஏற்று, அடுத்தகட்ட (Transaction Advisor) நடவடிக்கைகளுக்குச் செல்லப் போவதாகமத்திய முதலீட்டு மற்றும் பொதுச்சொத்துமேலாண்மைத் துறையின் (DIPAM) செயலாளர் துஹின் கன்டா பாண்டே மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  

அதாவது தற்போது விண்ணப்பித் துள்ள நிறுவனங்களுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 52.98 சதவிகித பங்குகளைக் கைப்பற்றுவதற்கு தகுதி உள்ளதா, நிதிநிலை உள்ளதா? என்பதை ஆய்வு செய்யப் போவதாக கூறியுள்ளனர்.இந்த ஆய்வுப் பணிகள் அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு நடக்கும் என்றாலும், பங்குகள் விற்பனை இறுதிக் கட்டத்தை எட்டுவது சந்தேகம் என்றேகருதப்படுகிறது. இதனால், 5-ஆவதுமுறையாக மறுஏலம் அறிவிக்கப்படலாம்; அப்போதும் கூட சந்தை மதிப்பை குறைத்தால் மட்டுமே ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் பங் கேற்கும் என்று கூறப்படுகிறது.பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அது ஆண்டொன்றுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி அளவிற்கு லாபம் ஈட்டிவரும் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதனை தனியார் நிறுவனங்கள் வாங்கும் பட்சத்தில், மும்பை,கொச்சி, பினா ஆகிய பகுதிகளில் இருக் கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலைகள், நாடு முழுவதும் இருக்கும் 17 ஆயிரத்து 138 பெட்ரோல் பங்க்குகள், 6 ஆயிரத்து 151 எல்பிஜி விநியோக ஏஜென்சி மற்றும் 61 விமானஎரிபொருள் நிலையங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.