tamilnadu

img

‘சிலுவை’ குறித்து சீண்டியவரின் ‘மூக்குடைத்த’ நடிகர் மாதவன்

மும்பை:
சுதந்திர தினத்தன்று நடிகர் மாதவன் இன்ஸ்டாகிராமில் தனது குடும்பபுகைப்படைத்தை வெளியிட்டிருந்தார்.அதில் சட்டை இல்லாமல் பூணூல் மற்றும் வெள்ளை வேஷ்டியில் மாதவனும், அவரது குடும்பத்தினரும் இருந்தனர். இந்த புகைப்படத்தை பதிவிட்டு கீழே, “அனைவருக்கும் சுதந்திர தின,ரக்ஷா பந்தன் மற்றும் ஆவணி அவிட்ட வாழ்த்துக்கள். உலகத்தில்அமைதியும், வளமும் நீடித்திருப்பதற்குஇறைவனிடம் கேட்கப்படும் பிரார்த்தனைகள் தொடரட்டும்” என்று வாழ்த்துச்செய்தியையும் மாதவன் வெளியிட்டிருந்தார்.இதனிடையே, அவர் பதிவிட்ட புகைப்பட பின்னணியில் ஒரு சிலுவைஇருந்தது. இதனைக் ‘கண்டுபிடித்து’விட்ட சமூகவலைத்தளவாசி ஒருவர், “மாதவன் வீட்டில் சிலுவை ஏன்இருக்கிறது?”என்று கேள்வி எழுப்பினார். அதாவது பூணூல் போட்டவர் வீட்டில் சிலுவையா? என்பதுதான் அவரது கேள்வியின் சாரம்.இதனைப் புரிந்துகொண்ட நடிகர்மாதவன், உடனடியாக பதில் ஒன்றைபதிவிட்டுள்ளார். அதில் “உங்களைப் போன்றவர்கள் தரும் மரியாதையை நான் ஒருபோதும் விரும்பியது இல்லை. நீங்கள் குணம் அடைவீர்கள்என்று நம்புகிறேன். உங்கள் வியாதி, என் வீட்டில் சீக்கியக் கோயில் படம்இருப்பதை உங்களுக்கு காண்பிக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதைப் பார்த்தால் நான் சீக்கியன் ஆகிவிட்டேன் என்றும்சொல்வீர்கள்” என்று மூக்கை உடைத்துள்ளார்.

மேலும், “பிற மத பொருட்கள் எனக்கு அன்பளிப்பாக வரும்” என்றும்,“நான் முஸ்லிம் தர்காவில் இருந்தும் மற்ற அனைத்து மத கோயில்களில் இருந்தும் ஆசிர்வாதம் பெறுகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ள மாதவன், “எனது அடையாளத்தை வெளிப் படுத்தும்; அதே நேரத்தில் அனைத்துமத நம்பிக்கைளுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று, சிறு வயது முதலே சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவன் நான்” என்றும் தெரிவித்துள்ளார்.நடிகர் மாதவனின் இந்த பதிலுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

;