tamilnadu

img

என்னுடைய நாடு கண்விழிக்கட்டும்!

எங்கே அச்சம் என்பது மனதில் இல்லையோ
எங்கே அறிவு செம்மாந்து நிற்கின்றதோ
எங்கே மனிதன் தலைதாழாமல் நிமிர்ந்து நிற்கின்றானோ
எங்கே அறிவு சுதந்திரமாகக் கிடைக்கின்றதோ
எங்கே குறுகிய சுவர்களால்
இந்தப் பரந்த உலகம் சின்னஞ்சிறு சுவர்களால்
துண்டுகளாக உடையவில்லையோ
எங்கே உண்மையின் ஆழத்தில் இருந்து சொற்கள் வெளிவருகின்றனவோ
எங்கே ஓய்வு அறியாத முயற்சியும் உழைப்பும்
நேர்த்தியான முழுமையை நோக்கித் தன் கரங்களை நீட்டுகின்றதோ
எங்கே பகுத்தறிவு எனும் நீரோடை
மடிந்து போன பழக்கங்களால்
வறண்ட பாலை மணலில் தன்னுடைய பாதையை இழந்துவிடவில்லையோ
எங்கே பரந்து விரிந்த எண்ணத்திற்கும் செயலுக்கும்
உன்னுடைய மனதை முன்னெடுத்துச் செல்கின்றாயோ
அத்தகைய சுதந்திரத்தின் சொர்க்கத்தில்
என் தந்தையே
என்னுடைய நாடு கண்விழிக்கட்டும்!

இன்று (ஆக.7) மகாகவி ரவீந்திரநாத் தாகூர் நினைவு நாள்