tamilnadu

img

நாக்கை அறுத்தும், எலும்புகளை உடைத்தும் சாதிவெறியர்கள் அரங்கேற்றிய கொடூரத்திற்கு தலைவர்கள் கண்டனம்... தலித் இளம்பெண் மனிஷா பாலியல் வன்கொலை நாட்டிற்கே வெட்கக்கேடு...

புதுதில்லி:
உ.பி. மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில்தலித் இளம்பெண் மனிஷா மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொலைசெய்யப்பட்டது. நாட்டிற்கே தலைக்குனிவுஎன்று அரசியல் கட்சித் தலைவர்கள்கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு உட்பட்டது சண்ட்பா கிராமம். இங்கு வயல் வேலைக்குச் சென்ற 19 வயது மனிஷாவை, தாக்குர் என்ற சாதி ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்த 4 இளைஞர்கள், கடந்த செப்டம்பர் 14-ஆம்தேதி மிகக் கொடூரமான முறையில் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கினர். பின்னர்அவரை எலும்பு முறியும் அளவிற்கு உடலின் பல இடங்களில் கடுமையாகத் தாக்கியஅவர்கள், நடந்த உண்மையை அவர் வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக நாக்கையும் துண்டித்து, சாலையோரம் உடலை வீசி விட்டு சென்றனர்.

தகவலறிந்த பெற்றோர்கள், குற்றுயிரும் குறையுயிருமாக கிடந்த மனிஷாவை மீட்டு, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மனிஷாவுக்கு இருகை, கால்களில் உணர்வே இல்லை என்பதையும்.. உடம்பில் உள்ள எலும்புகள்நொறுங்கி உள்ளதையும், நாக்கு அறுக்கப்பட்டுள்ளதையும் கண்டு அதிர்ச்சிஅடைந்தனர். ஐசியு-வில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர்.இதனிடையே தங்களின் மகளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்த பெற்றோர், மனிஷாவை தில்லிசப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கும் ஐ.சி.யு-வில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நீண்ட போராட்டத்திற்குப் பின், செவ்வாயன்று தலித் இளம்பெண் மனிஷாவின் உயிர் பிரிந்தது.இது அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர்கள், மனிஷாவின் மரணத்திற்கு இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். 

“ஹத்ராஸ் இளம்பெண்ணின் மரணம்ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும், நாட்டிற்கும்வெட்கக்கேடு. நமது நாட்டின் மகள்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி வருவது வருத்தமளிக்கிறது. அவர்களை, நம்மால் பாதுகாக்க முடியவில்லை” என்று தில்லி முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை தெரிவித் துள்ளார். குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.“உத்தரப்பிரதேசத்தில் குற்றங்கள் மிகப் பகிரங்கமாக நடக்கின்றன. சட்டம்- ஒழுங்கு பெரிய அளவிற்கு மோசமடைந் துள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எந்த நடவடிக்கையும்  இல்லை. இதற்கு முதல்வர் ஆதித்யநாத்-தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ்பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டித்துள்ளார்.தலித் சிறுமிகள் மீது தொடர்ந்து பாலியல் வன்முறைகள் அரங்கேற்றப்பட்டு வரும்நிலையில், உ.பி. மாநில ஆதித்யநாத் அரசு உணர்வற்ற அரசாங்கமாக உள்ளது. அதன்மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.
பலியான பெண்ணின் குடும்பத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள தேசிய மகளிர் ஆணையம் (என்.சி.டபிள்யூ) உறுதி பூண்டுள்ளதாக அதன் தலைவர் ரேகா சர்மா தெரிவித் துள்ளார்.இதனிடையே மனிஷா வல்லுறவு வழக்கில், தாக்குர் என்ற சாதி ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்த சந்தீப், அவரது மாமா ரவி(35) மற்றும் அவர்களது நண்பர் லவ் குஷ், ராம்ஆகிய 4 பேர்களை, எஸ்சி-எஸ்டி வன் கொடுமை தடுப்புச் சட்டம், கும்பல் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். மனிஷாவின் குடும்பத்திற்கு, ஹத்ராஸ் மாவட்ட  ஆட்சியர் பிரவீன் குமார், ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

வன்கொடுமை நிகழ்த்தி வந்த குற்றவாளியின் குடும்பம்...
பாலியல் வன்கொலை செய்யப்பட்ட மனிஷாவின் சொந்த கிராமமான சண்ட்பா-வில் தாக்குர், பிராமணர்கள், தலித்துக்கள் உட்பட மொத்தம் 5 பிரிவினர்- ஏறக்குறைய சமமான எண்ணிக்கையில் வசித்து வந்தாலும் தாக்குர் பிரிவினர்தான் தொடர்ந்து சாதிவெறிக் கொடுமைகளை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.அதிலும் குறிப்பாக, முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்கள் பகுதியில் உள்ள தலித் குடும்பங்களை தொடர்ந்து சாதிஆதிக்க வெறியுடன் துன்புறுத்தி வந்துள்ளனர். 19 ஆண்டுகளுக்கு முன்பு சந்தீப்பின் தாத்தா, தற்போது வன்கொலை செய்யப்பட்ட மனிஷாவின் தாத்தாவைத் தாக்கியுள்ளார். இதற்காக 3 மாதம்சிறைவாசமும் அனுபவித்துள்ளார். அவர்போலவே பேரன் சந்தீப்பும், தலித்துக் களுக்கு எதிராக வன்கொடுமைகளை இழைத்து வந்துள்ளார். குறிப்பாக பெண்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஆனால் பலரும் அஞ்சி புகார்கொடுக்க முன்வராததால், தற்போது கும்பல் வல்லுறவு மற்றும் படுகொலை அளவிற்கு துணிந்துள்ளார்.