கோட்டயம்:
கேரள உள்துறை முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியதலைவருமான திருவஞ்சூர் ராதா கிருஷ்ணன் எம்எல்ஏ பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் சனியன்று ரகசிய சந்திப்பு நடத்தினார். உள்ளாட்சி தேர்தல் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், பனச்சிக்காடு மண்டலத் தலைவர் பாபுகுட்டி ஈபன், பஞ்சாயத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் எபிசன் கே ஆபிரகாம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். பனச்சிக்காடு கோயிலுக்கு அருகி லுள்ள சேவாபாரதி அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், பனச்சிக்காட்டில் பாஜகவின் வாக்கு வெகுவாகக் குறைந்துவிட்டது. அந்த வாக்குகளை திருவஞ்சூர் பெற்றார். அதற்கு பிரதிபலனாக தங்களது பிரதிநிதிகளை பஞ்சாயத்தில் வெற்றி பெறச் செய்வதற்காக மேற்கொண்ட நடவடிக்கை என தகவல்கள் தெரிவிக்கிறன. ஆனால் பனச்சிக்காடு கோவிலில் நவராத்திரி விழா குறித்து பேசுவதற்காக ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு திருவஞ்சூர் வருகை தந்ததாகஅவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள னர்.பனச்சிக்காடு பஞ்சாயத்து எல்டிஎப் வசம்உள்ளது. ஆனால் காங்கிரசும் பாஜகவும்கூட்டாக அதை கவிழ்க்கும் நம்பிக்கை யில்லா தீர்மானத்தை ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.