திருவனந்தபுரம்:
கேரளத்தின் வரலாற்றில் முதல் முறையாக தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையில் உள்ள ஊர்காவல் படையில் பெண்களை நியமிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். அதோடு, பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.தீயணைப்புத் துறையிலும் காவல்துறையிலும் நியமிக்கப்பட்ட ஊர்காவல் படையினர் தற்போது பேரழிவு பகுதிகளில் மீட்புபணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக அரசாங்கம் ஏற்கனவே பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக பெண்களை தீயணைப்பு மற்றும் மீட்பு ஊர்காவல்படை காவலர்களாக நியமித்து இடஒதுக்கீடு அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.