tamilnadu

கர்தார்பூர் சிறப்பு வழித்தடம் இந்தியா-பாகிஸ்தான் குழுவினர் பேச்சுவார்த்தை துவக்கம்

புதுதில்லி, ஜூலை 14- கர்தார்பூர் சிறப்பு வழித்தடம் அமைப்பது தொடர்பாக இந்தியா -பாகிஸ்தான் குழுக்கள் வாகா எல்லையில், பாகிஸ்தான் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. இந்திய எல்லையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் பாகிஸ்தானில் கர்தார்பூர் அமைந்துள்ளது. அங்கு சீக்கிய குரு, குருநானக் கடைசியாக வாழ்ந்ததாகக் கூறப்படும் இடத்தில் கர்தார்பூர் சாஹிப் புனிதத் தலம் உள்ளது. இந்த புனிதத்தலத் துக்கு சீக்கிய மக்கள் செல்லும் வகையில் இந்தியப் பகுதியிலும், அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் எல்லைக்குள்ளும் கர்தார்பூர் வரையிலும் சிறப்பு வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடம் தொடர்பான இரண்டா வது கட்டப் பேச்சுவர்த்தை இரு நாட்டு அதி காரிகளிடையே ஞாயிறன்று நடைபெற்றது. இதற்காக இந்திய அதிகாரிகள் வாகா எல்லை யைக் கடந்து பாகிஸ்தான் பகுதிக்குச் சென்றனர். பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர் பாளர் முகமது ஃபைசல் தலைமையிலான குழுவினர், இந்திய உள்நாட்டுப் பாது காப்புத்துறை இணைச் செயலாளர் எஸ்.சி.எல்.தாஸ் தலைமையிலான குழுவினரை வரவேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் வழித்தடம் மற்றும் வழித்தடத்தை பயன்படுத்துதல் தொடர்பான செயல்பாட்டு நடைமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படு கிறது. இந்த வழித்தடத்தில் இந்தியத் தரப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் நிலை யில் பாகிஸ்தான் தரப்பில் 2 வழிச்சாலை மட்டுமே அமைக்கப்படுகிறது. மேலும் இரு நாட்டு எல்லையில் உள்ள நீர் வழியைக் கடக்க இந்தியத் தரப்பில் பாலம் அமைக்கப்படும் நிலையில் பாகிஸ்தான் தரப்பில் தரைமட்டப் பாதை மட்டுமே அமைக்கப்படுகிறது. வெள்ளக் காலங்களில் பாதை அடைபடும் வாய்ப்புகளை சுட்டிக்காட்டியுள்ள இந்தியா, பாகிஸ்தானும் பாலம் அமைக்க கோரி வரு கிறது. இவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.