புதுதில்லி, ஆக.17- மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, துரதிர்ஷ்டவசமானது என்றும் தேவையற்றது என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: பிரசாந்த் பூஷன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரு டிவிட்டர் பதிவுகள் உச்சநீதிமன்றத்திற்கு அவமதிப்பைக் கொண்டுவந்துவிட்ட தாகக் கூறியிருப்பது, விமர்சனம் மீது அதற்கு இருந்துவரும் சகிப்பின்மை யையே வெளிப்படுத்து கிறது. நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தின் தாராளவாத அணுகுமுறை அதன் தகுதிக்கு ஏற்புடையதல்ல. இந்தத் தீர்ப்பு நாட்டில், மத்தியஆட்சியாளர்கள் தங்கள் கொள்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் எதிராகக்கருத்துகூறு பவர்கள் அனைவரையும், இதழியல் சுதந்திரத்தையும் நசுக்குவதற்குப் பயன்படுத்திவரும் தேசத்துரோகக் குற்றப் பிரிவு போன்ற அரக்கத்தனமான சட்டங்கள் மூலம் நிலவும்சகிப்பின்மை மற்றும் ஒடுக்குமுறை சூழ்நிலையை மீண்டும் வலுப்படுத்துவதற்கே இட்டுச்செல்லும். உச்சநீதிமன்றம், தன்னுடைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்றும், இந்த வழக்கில் தண்டனை எதுவும் அறிவிக்காது தவிர்த்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கருதுகிறது.