tamilnadu

img

இந்திய எல்லையில் படைகளைக் குவிக்கவில்லை... சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பேட்டி

புதுதில்லி:
இந்திய எல்லையில் சீனாபடைகளை குவித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்தியப் படைகள் கைப்பற்றியுள்ள காலா டாப் பகுதிக்கு மிகஅருகிலேயே சீன போர் டேங்குகள் மற்றும் கவச வாகனங் கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.குறிப்பாக, பாங்கோங் திசோ ஏரியை குறிவைத்து சீனா எல்லையில் மீண்டும் ஊடுருவல் முயற்சிகளை மேற் கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியது.சுட்டுவிடக்கூடிய தொலை வுக்கு மிக அருகிலேயே இருநாட்டு ராணுவங்களும் உள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முப் படைகளின் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுனிங் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றுஅவர் கூறியுள்ளார்.எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை சீனா ராணுவத்தினர் மதித்தே நடந்து வருகின்றனர். 70 ஆண்டுகளில் பிற நாட்டின் ஒரு அங்குலத்தைக் கூடஆக்கிரமிக்க சீனா முயன் றதோ, போரை தூண்டும் மோதல்களிலோ ஈடுபட்டது இல்லை.எல்லை தாண்டியதும் இல்லை. சில நேரங்களில்தகவல் தொடர்பில் பிரச்சனைகள் இருந்திருக்கலாம் என்று ஹூவா குறிப்பிட் டுள்ளார்.

மேலும், இருதரப்பும் அமைதியையும் நல்லுறவையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் எல்லைகளில் அமைதியை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இருநாட்டு மக்களும் உண்மைகளை உணர்ந்து அமைதியாக வாழவே விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார்.

;