திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் தோந்நைக்கல் லைப் சயின்ஸ் பூங்காவில் உள்ள சர்வதேச வைராலஜி நிறுவனத்தின் முதல் கட்ட செயல்பாட்டை வியாழனன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் காணொலி மூலம் திறந்து வைத்தார். விழாவுக்கு துணை சபாநாயகர் வி.சசி தலைமை வகித்தார்.
கோவிட் நோயறிதலுக்கான ஆர்டிபிசிஆர் மற்றும் பிற ஆராய்ச்சி கருவிகள் இந்த மையத்தில் இடம்பெற்றுள்ளன. முழுமையாக செயல்பட்டதும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள இந்த வைராலஜி நிறுவனம் ஒரு தன்னாட்சி நிறுவனமாக மாற்றப்படும். இதற்காக, முதல்வர் தலைமையில் ஒருஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இயக்குனருடன், மேலும் 18 புதிய பதவிகள் அனுமதிக்கப்பட்டுள் ளன.