புதுதில்லி:
அமெரிக்கா- இந்தியா இருநாடுகளின் படைகளுக்கிடையிலான உறவுக்கு அடித்தளம் அமைக்க உயர்மட்ட இந்திய ராணுவஜெனரல் அமெரிக்காவுக்கு செல்கிறார். இரு படைகளுக்கிடையில் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் அக்டோபர் 17 முதல் 20 ஆம் தேதி வரை அமெரிக்காவில் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் லெப்டினென்ட் எஸ்.கே.செய்னி தங்கியிருப்பார். இந்தோ-பசிபிக் பகுதியின் இராணுவ அங்கமான அமெரிக்க இராணுவ பசிபிக் பகுதியை பார்வையிடுவார். மேலும் ராணுவத்தலைமையுடன் விரிவாக கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பயணம் இந்திய மற்றும்அமெரிக்க படைகளுக்கு இடையிலான செயல்பாடு மற்றும் உயர்மட்டத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.