tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்திய சீன எல்லைப் பகுதி களில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம். என்ன நடந்தது என்பதை அரசாங்கம் அதி காரப்பூர்வமான அறிக்கையாக வெளியிட வேண்டும். அமைதி யும் சகஜ நிலையும் உருவாக்கும் அடிப்படையில் இரு அரசாங்கங் களும் பேசி பதற்றத்தை தணிக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

பெட்ரோல் டீசல் விலை  தொடர்ந்து உயர்த்தப்படு கிறது. இது மிகவும் மனிதாபிமான மற்ற செயல். மக்களிடம் வாழ்வதற்கு பணம் இல்லை; சாப்பிடுவதற்கு போதுமான உணவு இல்லை. மோடி அரசாங்கம் வரிகளை உயர்த்தி தனது வருமானத்தை பெருக்கி கொள்கிறது; மக்களை சுமையில் ஆழ்த்துகிறது. வரி உயர்வை திரும்பப் பெறுங்கள்; மக்களுக்கு நிதி உதவியும் உணவும் தாருங்கள்.

பெட்ரோலிய பொருட்களின் விலை களை சர்வதேச சந்தை விலையுடன் இணைத்து மாறுதலுக்கு உள்ளா க்கிய பொழுது எக்சைஸ் தீர்வை சுமையை படிப்படியாக குறைத்து பூஜ்யத்திற்கு கொண்டு வரப்படும் என மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. மாறாக மோடி அர சாங்கம் அடிக்கடி எக்சைஸ் தீர்வை யை அதிகரித்து தனது வருமான த்தை கொழுக்க வைத்துக்கொண் டது. இது மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். உடனடியாக இந்த உய ர்வை திரும்பப் பெற வேண்டும்.. 

இந்த புகைப்படத்தில் இடது கோடியில் இருப்பவர் பெயர் நீஷல் மோடி. பஞ்சாப் தேசிய வங்கி யில் 14000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட  நீரவ்மோடியின் சகோதரர் இவர். இந்த மோசடியில் இவருக்கும் பங்கு உள்ளது என இவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர் பெல்ஜியத்தில் பதுங்கியுள்ளார். ஆனால் இவரைப் பற்றி எந்த விவரமும் மத்திய புலனாய்வு துறை இணையத்திலும் இல்லை; இன்டர் போல் இணையத்திலும் இல்லை எனவும் இவரை பற்றிய விவரங்களை தருவதற்கு அரசாங்க அமைப்புகள் மறுக்கின்றன எனவும்  ஆர்.டி.ஐ. ஆர்வலர் சன்யால் நியூஸ் கிளிக் இதழில் கூறுகிறார். நீஷல் மோடி அம்பானி சகோதரர்களின் தங்கை மகளை திருமணம் செய்து ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.