tamilnadu

img

அமெரிக்கா-தலிபான் ஒப்பந்த நிகழ்ச்சியில் இந்தியா

புதுதில்லி:
அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே சனிக்கிழமையன்று கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் பங்கேற்க இந்தியாஉள்ளிட்ட 24 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. தலிபான் பிரச்சனையில் ஆப்கன் அரசுஎடுக்கும் நிலைப்பாட்டை ஒட்டியே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதா வேண்டாமா என்ற முடிவை இந்தியா எடுக்கும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் ஆப்கன்அரசு சார்பில் 6 பேர் அடங்கிய குழுவினர் தோஹாவுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு நடத்தப்படும் பேச்சுவார்த்தையில், ஆப்கன் சிறைகளில் உள்ளசுமார் 5 ஆயிரம் தலிபான்களை விடுவிக்கும் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;