புதுதில்லி, ஜூலை 17- மாநிலங்களவையில் தேசியப் புலனாய்வு முகமை திருத்தச் சட்டமுன்வடிவின்மீது விவாதம் நடைபெற்ற போது ார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் புதனன்று தேசியப் புல னாய்வு முகமை (திருத்தச்) சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப் பட்டது. இதனை அறிமுகப்படுத்துவதை எதிர்த்தும் இதனைத் தெரிவுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி யும் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் கோரினார்கள். ஆயினும் அரசுத்தரப்பில் இதற்கு இணங்காததால் பின்னர் அவர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. மாநிலங்களவையில் புதனன்று தேசியப் புலனாய்வு முகமை (திருத்தச்)சட்டமுன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டது.
டி.ஆர்.எஸ். எதிர்ப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், இதனை தெரிவுக்குழுவிற்கு அனுப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோன்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி உறுப்பினர் கே. கேஷர் ராவும் கோரினார். எனினும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்கான தீர்மானம் எதையும் உறுப்பினர்கள் கொண்டுவரவில்லை என்று கூறி இதனை ஏற்க மறுத்து விட்டார். பின் ஏன் நாம் தெரிவுக்குழு மற்றும் நிலைக்குழுக் களைப் பெற்றிருக்கிறோம் என்று ஆவேசத்துடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து. ராஜா வினா தொடுத்தார். பின்னர் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் அரசின் முடிவை எதிர்த்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள். தேசியப் புலனாய்வு முகமை (திருத்தச்)சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தில் பங்கேற்று கே.கே.ராகேஷ் (சிபிஎம்) பேசியபோது, இச்சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு இதில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறினார். மத அடிப்படையில் இயங்கும் பயங்கரவாதக் குழுக்களைக் குறியாகக் கொண்டு இது கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றார். அப்போது அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மதத்தை விவாதத்தில் கொண்டுவருவதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.
கே.கே. ராகேஷ் இதற்குப் பதிலளிக்கும்விதத்தில் இந்துத்துவா ஒரு மதம் இல்லை என்றார். முஸ்லீம் தொழும் இடத்தை இந்த சட்டம் அணுகுகிறபோது அதன் தன்மையே வேறு என்றார். இப்போது மீண்டும் அவைத்தலைவர் தலையிட்டு, இனத்தின் பெயரைக் குறிப்பிடாதீர்கள் என்றார். தொடர்ந்து ராகேஷ் பேசுகையில் மாலேகான் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தைக் குறிப்பிட்டு அதில் குற்றம்சாட்டப்பட்ட பிரதானமானவர்கள் அனைவரும் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார்கள் என்றார். இந்தச்சட்டம் குறித்து மாநில அரசுகளுடன் கலந்தா லோசனை செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிறுபான்மையினர் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். இச்சட்டம் அவர்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு வழிவகுக்கும். கடந்த சில ஆண்டு களாக நடைபெற்று வரும் நிகழ்ச்சிப் போக்குகள் இதற்கு அடையாளமாகும் என்றார். (நநி.)