tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

மோடி அரசாங்கத்தால் பொருளாதரம் திட்டமிட்டு கடந்த  6 ஆண்டுகளாக அழிக்கப்பட்டது. ஏழை மக்கள் உயிர்வாழ போதுமான உதவிகள் கொடுக்கப்படவில்லை. தனக்கு வாலாட்டும் ஊடகங்கள் மூலமாக அரசாங்கம் பொய்களை  பரப்பி கொண்டுள்ளது. மறுபுறத்தில் உணவுப் பொருட்கள் விலை உச்சாணியில்!

கோவிட் மரணங்கள் 50,000ஐ தாண்டியுள்ளது. கடந்த 10 நாட்களில் 10,000 மரணங்கள்! மிக மோசமான சுகாதார நெருக்கடி குறித்து மத்திய அரசாங்கம் கவலைப்படுவதாக தெரியவில்லை. வேகமாக பரவிக் கொண்டுள்ள தொற்றை தடுப்பதற்கு என்ன திட்டம் உள்ளது என்பதை மோடி அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். பொது  சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த உடனடியாக கூடுதல் செலவு செய்ய வேண்டும்.  மக்கள் ஏழ்மைக்குள் வீழாமல் இருக்க அவர்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

பா.ஜ.க.வுக்கும் முகநூல் நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை முகநூல் நிறுவனம் அரசுதுறை அல்லது தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகளுடன் செயல்படுவதை தடை செய்ய வேண்டும்.

செய்தி: பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து தகவல் அறியும் சட்ட த்தின் கீழ் விவரங்கள் தர பிரதமர் அலுவலகம் மறுப்பு.  பிரதமர் எதை மறைக்கிறார்? ஏன் மறைக்கிறார்? பெருந்தொற்றை எதிர்கொள்வது எனும் பெயரில் வஞ்சகக் கொள்ளையா? பெருந்தொற்றை சிறப்பாக எதிர்கொள்ள இந்த  நிதியை உடனடியாக மாநிலங்களுக்கு கொடுங்கள். மக்க ளுக்கு பணமும் இலவச உணவும் இந்த நிதிமூலம்கொடுங்கள்.

கோவிட் மரணங்கள் செங்குத்தாக உயர்வு. நாம் மரண வலைக்குள் தள்ளப்படுகிறோமா? மோடியும்  அவரது பா.ஜ.க. அரசாங்கமும் தமது பொறுப்பை கை கழுவி விட்டனர். மக்கள் தமது பாதுகாப்பை தாமே கவனித்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  மோடி அரசாங்கத்தின் முன்னுரிமை வேறு பிரச்சனைகளில் உள்ளது. பொருளாதார வீழ்ச்சியை விரைவுபடுத்துவது/ மதப்  பிளவுகளை கூர்மையாக்குவது/ அரசியல் சட்டத்தை சிதைப்பது என்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

பெரும்பான்மைவாதம் என்பது தேசியவாதம் அல்ல என புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர்  கூறியுள்ளார். மொழி/மத நம்பிக்கைகள்/ கலாச்சாரம்/ உணவு/ சமூக பழக்கங்கள் ஆகியவற்றில் உள்ள மகத்தான பன்முகத் தன்மைகள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. பெரும்பானமைவாதம் என்பது தேசிய வாதம் அல்ல என்பது மட்டுமல்ல; அது தேச விரோதமானது; அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அது இந்தியாவை அழித்துவிடும்.