tamilnadu

img

2027-இல் இந்தியாதான் ‘நம்பர் ஒன்’

புதுதில்லி:
உலக மக்கள் தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. 2050-ஆம் ஆண்டில், இது மேலும் 200 கோடி அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இன்னும் 8 ஆண்டுகளில், 2027-க்குள்உலக மக்கள் தொகையில்சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்து விடும் என்று ஐக்கிய நாடுகளின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை 273 கோடியாக உயர்ந்து விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;