சிபிஎம் வலியுறுத்தல்
புதுதில்லி, ஆக. 28- ஜேஇஇ/நீட் தேர்வுகளை ஒத்தி வைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சி யின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் தொழிற்கல்வி நிலையங் களில் (professional courses) மாணவர் சேர்க்கைக்காக ஜேஇஇ-நீட் தேர்வுகளை எழுதவேண்டும் என்று அரசாங்கம் ஒருதலைப் பட்சமாக முடிவு எடுத்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுதியாக எதிர்க்கிறது. இதில் மிகவும் கூருணர்வற்ற மூர்க்கத்தனமான விஷயம் என்னவென்றால், நாடே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீளா தது மட்டுமல்ல, தொற்று மிகவும் மோசமாக பர விக்கொண்டும் அதனால் இறப்போர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் அரசாங்கம் இதனைத் திணித் திருப்பதாகும். இந்நிறுவனங்கள் மாணவர் களின் எதிர்கால நலனுக்காக திறக்கப்பட வேண்டியது அவசியம்தான். எனினும், இப்போ துள்ள நிலைமை இதுபோன்ற பணியை மேற்கொள்வதற்கு முற்றிலும் கனியாத நிலையாகும். இது பல லட்சக்கணக்கான மாணவர்களின் உடல்நலத்திற்குக் கேட்டினை ஏற்படுத்தக்கூடியதாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, கொரோனா வைரஸ் தொற்று பரவுவது முற்றிலுமாகக் கட்டுக்குள் வைக்கும் நிலை ஏற்படும் வரையிலும் தேர்வு கள் நடத்தப்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்து கிறது. மாணவர்களின் கல்வியாண்டு இழக்கப் படாது பாதுகாக்கப்படக்கூடிய விதத்தில் நுழைவுத் தேர்வுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(ந.நி.)