tamilnadu

img

ஆரோக்கிய சேது செயலி குறித்த ஆர்டிஐ கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுக்கும் அரசு

ஆரோக்கிய சேது செயலி குறித்த ஆர்டிஐ கேள்விக்கு பதில் அளிக்க மறுத்திருப்பது செயலின் நம்பக தன்மை குறித்து கேள்வி எழுப்பி உள்ளது. 
சமூக ஆர்வலர் சவுரவ் தாஸ் என்பவர்  ஆரோக்கிய சேது குறித்த தகவல்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி கேட்டிருந்தார். அவரது மனுவில், ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டிற்கான திட்டத்தின் தோற்றம், அதன் ஒப்புதல் விவரங்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அரசு துறைகள் மற்றும் பயன்பாட்டை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள தனியார் நபர்களிடையேயான தகவல்தொடர்புகளின் நகல்கள் போன்ற விவரங்களை அவர் கேட்டிருந்தார். 
இதையடுத்து  Https://aarogyasetu.gov.in/ என்ற வலைத்தளம் gov.in என்ற டொமைன் பெயருடன் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்குமாறு மத்திய தகவல் ஆணையம் சிபிஐஓ, தேசிய தகவல் மையத்தை கேட்டது.
மனுவில் கேட்கப்பட்ட  கேள்விக்கு பதில் அளிப்பது சம்பந்தமாக அவரது மனு பல்வேறு துறைகளை சென்று வந்ததாக கூறப்படுகிறது.  சுமார் 2 மாதங்கள் அந்த மனு குறித்து, மத்தியஅரசின் பல்வேறு துறை பதில் தெரிவிக்க மறுத்து, வேறு துறைக்கு மாற்றி மாற்றி அனுப்பியதும் தற்போது தெரியவந்துள்ளது. 
இந்த செயலியை தேசிய தகவல் மையம் உருவாக்கியதாக முதலில் கூறப்பட்ட நிலையில், ஆர்டிஐ கேள்விக்கு பதில் தெரிய என்று தேசிய பயன்பாட்டு மையம் தெரிவித்து உள்ளது. அதன் பதிலில்,  ” செயலியின் பயன்பாட்டை உருவாக்குவது தொடர்பான முழு கோப்பும் என்ஐசியுடன் இல்லை” என்று கூறியதாக கூறப்படுகிறது.
அதுபோல, ஐ.டி அமைச்சகம் இந்த கேள்வியை தேசிய மின்-ஆளுமை பிரிவுக்கு மாற்றியது, மனுவில்  “கோரப்பட்ட தகவல்கள் (எங்கள் பிரிவு) தொடர்பானது அல்ல.” என்று தெரிவித்துள்ளது. 
இதையடுத்து, கோபமடைந்த மத்திய தகவல் ஆணையம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 20-ன் கீழ் உரிய பதில் அளிக்காத சிபிஐஓக்கள், மின்னணு அமைச்சகம், தேசிய தகவல் மையம், நெஜிடி ஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
மேலும் ஆரோக்யா சேது இணையதளம் குறித்து தேசிய தகவல் மையத்திடம் எந்த தகவலும் இல்லை என்பது எப்படி என்பதை விளக்கவும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.