tamilnadu

img

நல்ல செய்தியை தருவதாக ‘2020 பட்ஜெட்’ இல்லை!

புதுதில்லி:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த, 2020-21 நிதியாண்டிற்கான பட்ஜெட் நல்ல செய்தியைச்சொல்லவில்லை என்று பொருளாதார வல்லுநர் டி.என். நினன் தெரிவித்துள்ளார்.‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ செய்தித்தாள் மற்றும் இணையதளத்துக்கு, சக பத்திரிக்கையாளரான ஏ.கே. பட்டாச்சார்யாவுடன் நடத்திய உரையாடலில், இதனை டி.என். நினன் கூறியுள்ளார்.“பட்ஜெட் உரையின் முதல் இரண்டுமணிநேரம் ‘புகை-கண்ணாடி விளையாட்டாகவே’ இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பீட்டளவிலான எண்ணிக்கைகளைக் குறித்து பேசப்படவில்லை. அதன் செலவினங்களின் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.வருமான ரீதியான தொகையைப் பொறுத்தவரை, அவர்களுக்குத் தேவையான எந்த எண்களையும் அவர்களால் போட்டுக்கொள்ள முடியும். ஆனால் உண்மையில் அதில் எவ்வளவு தீவிரம் காட்டப்படுகிறது என்பது தெரியாது” என்று டி.என். நினன் தெரிவித்துள்ளார்.

;