tamilnadu

img

தில்லி கார்கி கல்லூரி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு- தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

தில்லி கார்கி கல்லூரி மாணவிகள் வெளியிட்ட பாலியல் குற்றச்சாட்டு குறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
தில்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கார்கி கல்லூரியில் கடந்த வாரம் ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவின் இறுதிநாளான பிப்ரவரி 6 ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தனர்.  அவர்கள் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சமூக ஊடகங்களில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர்.  ஆனால் மாணவிகளிடமிருந்து எழுத்துப் பூர்வமான புகார் வரவில்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர். கல்லூரி வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றியும் போலீசார் சுயமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தில்லி கார்கி கல்லூரிக்கு விரைந்துள்ள தேசிய மகளிர் ஆணையம், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.