tamilnadu

img

மகாத்மா காந்தி புகைப்படங்கள் அகற்றம் - துஷார் காந்தி அதிருப்தி

மகாத்மா காந்தி கொல்லப்பட்ட பிறகு உடனடியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை காந்தி ஸ்மிருதியிலிருந்து அகற்றியதாக மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ட்விட்டர் பதிவில் அவர், “அதிர்ச்சியடைந்தேன்! ஹென்றி கார்ட்டியர் பிரெஸானின் மகாத்மா காந்தி கொலையுண்ட பிறகான புகைப்படங்கள் காந்தி ஸ்மிருதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. பிரதான் சேவக்கின் உத்தரவின் பேரில் இந்த முக்கியப் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன. காந்தியைக் கொன்றவர்கள் வரலாற்று ஆதாரத்தை அழிக்கின்றனர். ஹே ராம்!” என்று ட்விட்டரில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தன்னை ‘பிரதான் சேவக்’ என்று அழைத்துக் கொண்டதையே துஷார் காந்தி தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். காந்தி ஸ்மிருதியின் தலைவர் பிரதமர்தான், இதுவும் தர்ஷன் சமிதியும் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 
இன்னொரு ட்விட்டரில் துஷார் காந்தி இந்தியில் குறிப்பிடும்போது, இந்தியா மாறுகிறதோ இல்லையோ, வரலாற்றை மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது என்று சாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;