tamilnadu

img

ரூ.11 ஆயிரம் பாக்கிக்காக நோயாளியை கட்டிவைத்த மருத்துவமனை

ஷாஜப்பூர்:
மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவரை மருத்துவமனை நிர்வாகம் கை, கால்களை கட்டி வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பந்தப்பட்ட முதியவர் மருத்துவக் கட்டணமாக ரூ,11 ஆயிரம் தரவேண்டியிருந்து. முன்பணமாக 5 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினரால் முழுக் கட்டணத்தையும் செலுத்த முடியவில்லை. இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாநில அரசு நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

;