tamilnadu

img

500 தனியார் அகாடமிகளுக்கு நிதி உதவி....

புதுதில்லி:
கேலோ இந்தியா திட்டத்தின் மூலம், 500 தனியார் அகாடமிகளுக்கு 2020-21 நிதியாண்டு தொடங்கி, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நிதி ஆதரவு வழங்கும் வகையிலான ஊக்குவிப்பு அமைப்பை முதன்முதலாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 2028 ஒலிம்பிக் போட்டிக்கு 14 முன்னுரிமை விளையாட்டுக்கள் அடையாளம் காணப்படும். இதில், திறன் மிக்க வீரர் களை கொண்ட அகாடமிகள் இந்த ஆதரவைப் பெறுவதற்கு தகுதியானவை.இந்த முடிவு குறித்து  மத்திய இளைஞர்நலன்- விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில்,  இத்தகைய நிறுவனங்களுக்கு அரசின் ஆதரவு கிடைக்கவேண்டியது அவசியமாகும். அப்போதுதான், நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும்விளையாட்டு திறன் வளர்ச்சி பெற முடியும். நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஏராளமான சிறிய அகாடமிகள், விளையாட்டு வீரர் களுக்கு பயிற்சி அளிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த தனியார் அகாடமிகளில், கட்டமைப்பு, விளையாட்டு அறிவியல், ஆதார ஆதரவு இருந்தால் மட்டுமே தரம் வாய்ந்த வீரர்கள், தரமான பயிற்சிகளைப் பெற முடியும் என்று தெரிவித்தார்.