tamilnadu

img

விடுவிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நீதி வழங்குவதை உறுதிசெய்திடவேண்டும்: சிபிஎம்

புதுதில்லி, ஆக.31- அஸ்ஸாமில் குடிமக்கள் தேசியப் பதி வேட்டில் விடுவிக்கப்பட்டவர்கள் அனை வருக்கும் நீதி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது: அஸ்ஸாம் மாநிலத்தில் வெளியாகி யிருக்கின்ற குடிமக்கள் தேசியப் பதிவேட்டில் 19 லட்சத்து 6 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டி ருக்கின்றனர். இவ்வளவு பெரிய எண் ணிக்கை விடுபட்டிருப்பதிலிருந்து இந்தியக் குடிமக்கள் ஏராளமானவர்கள் விடு விக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற நியாய மான அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டில் வாழும் அனைத்து இந்தியக் குடிமக்களும் குடிமக்கள் தேசியப் பதி வேட்டில் இடம்பெற வேண்டியது முக்கியமா கும். இதற்கு கீழ்க்கண்டவிதத்தில் நட வடிக்கை எடுத்திட வேண்டும். முதலாவதாக, விடுவிக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் உரிமைகள் குறித்து அர சாங்கம் தெளிவுபடுத்திட வேண்டும். அவர்களின் மேல்முறையீடுகளில் தீர்ப்பு வழங்கப்படும்வரை, அவர்களின் உரி மைகள் மற்றும் வசதிகளைப் பொறுத்தவரை யில்  இப்போதிருக்கும் நிலை தொடர வேண்டும். அஸ்ஸாமில், இந்த விஷயத்தை விவா திப்பதற்காக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டிட வேண்டும்.  

இரண்டாவதாக, விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள நடை முறை 120 நாட்களுக்குள் அந்நியர் நடுவர் மன்றத்திற்கு விண்ணப்பித்திட வகை செய்திட வேண்டும். அந்நியர் நடுவர்மன்றம் (Foreigners Tribunal) ஒரு நீதித்துறை அமைப்பு அல்ல. அதன் செயல்பாடுகள் என் பவை கிட்டத்தட்ட அரசின் நிர்வாக வகை யிலானதேயாகும். இது மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் கேட்கப்படக்கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  விரும்புகிறது. அந்நியர் நடுவர்மன்றங்கள் இதற்குப் போதுமா னவை அல்ல. மூன்றாவதாக, அந்நியர் நடுவர் மன் றங்களால் அந்நியர்கள் என்று அறிவிக்கப் பட்டவர்களை தடுப்புக்காவல் முகாம்களில் (detention camps) அடைத்திட வேண்டும் என்கிற முடிவினை உடனடியாக நிறுத்திட வேண்டும். இவ்வாறு செய்வது என்பது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும். அந்நியர்கள் என்று அறிவிக்கப்பட்ட வர்களுக்கு நீதி கிடைத்திட, பல்வேறு அமைப்புகளின் கீழ், தேவையான சட்ட உதவிகள் அனைத்தையும் இவ்வாறு செய்தி டும்.

அஸ்ஸாமில் தேசியக் குடிமக்கள் பதி வேட்டை மேம்படுத்துவது என்பது குறிப் பிட்ட வரலாறு மற்றும் அரசியல் சூழ்நிலை மைகளில் வந்திருக்கிறது. மதவெறி நிகழ்ச்சிநிரலை நாடு முழுதும் கொண்டு சென்றிடும் நோக்கில் பாஜக அரசாங்கம் இதனை நாடு முழுவதற்கும் விரிவாக்கிட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கி றது. நாடு முழுதும் இதனை விரிவுபடுத்து வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறது.    இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.  (ந.நி.)