tamilnadu

img

தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் கவலைக்கிடம்...

தில்லி 
தில்லி சுகாதாரத்துறை அமைச்சராவாக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். இவருக்கு கடந்த திங்களன்று இரவு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. 

மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் தில்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னெச்சரிக்கையாக கொரோனா சோதனை செய்யப்பட்டது. முதல் பரிசோதனையில் அவருக்கு கொரோனா  தொற்று இல்லை. 
புதனன்று செய்யப்பட்ட 2-வது பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது  உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. மேலும் முழு உடல் பரிசோதனையில் ஜெயினுக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் நேற்று ஜெயினின் உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. அவரது குடும்பத்தினர் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார். "எங்கள் மருத்துவமனைக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதி இல்லை" என கூறி ராஜீவ் காந்தி மருத்துவமனை சிகிச்சைக்கு மறுத்துவிட்டது. இதனால் சத்யேந்திர ஜெயின் மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அங்கு அவசர சிகிசிகை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

;