tamilnadu

img

தில்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு - பத்திரிகையாளர் மீது துப்பாக்கி சூடு 

தில்லியில் பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்டுள்ள துப்பாக்கி சூடு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவில் முஸ்லீம்களை தனிமைப்படுத்தும் நோக்குடன் மோடி அமித்ஷா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. வட கிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்த போது அங்கு பாஜக கும்பல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் குண்டு துளைக்கப்பட்டு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயங்கள் காரணமான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தில்லியில் இன்றும் பிரஹம்புரி மற்றும் மஜ்பூர் ஆகிய இடங்களில் கல்வீச்சு தாக்குதல் நடந்தது. சற்று நேரத்திற்கு முன் 3வது முறையாக வடகிழக்கு பகுதியில் தாக்குதல் பயங்கர மோதல் நடந்தது. 
அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் அரவிந்த் குணசேகரை வன்முறைக் கும்பல் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியது. அவரை சக செய்தியாளரான சவுரப் சுக்லா மீட்க முயன்றபோது வன்முறை கும்பல் தடியால் கடுமையாகத் தாக்கியது. அரவிந்தை மீட்க முயன்றபோது சவுரபிற்கும் தடியடி நடந்துள்ளது. அவரது முதுகில் சிலர் குத்தியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலின்போது  செய்தியாளர் அரவிந்த்துடைய பற்கள் உடைந்துள்ளன. 
பின்னர் வன்முறைக் கும்பலிலிருந்து ஒரு வழியாகச் செய்தியாளர்கள் தப்பியுள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் நலமாக உள்ளனர். 
வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மூத்த ஊடகவியலாளர் சீனிவாசன் ஜெயினுடன் மரியம் ஆல்வி செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, மரியம் ஆல்வி மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 
இதேபோன்று கேமரா மேன் சுஷில் ரதீக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.
என்டிடிவி பணியாளர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். ஆனால், டெல்லியில் வன்முறைக் கும்பல் ஏற்படுத்தியிருக்கும் கலவரம் பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. தற்போது கூடுதல் போலீசார் டெல்லியில் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கிய தேவை என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.  
மேலும் ஜே.கே 24xx 7 செய்தியாளர் ஆகாஷ் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாக  பிடிஐ செய்தி நிறுவம் தெரிவத்துள்ளது. இச்சம்வம் தில்லி பத்திரிகையாளர் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.