tamilnadu

img

புதிய நோயாளி இல்லா நாட்கள்

கேரளத்தில் வெள்ளிக்கிழமை வரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 503 பேரில் 487 பேர் குணமடைந்துள்ளனர். 16 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் பெரும்பாலான நாட்களில் புதிய நோயாளிகளின் இல்லை. உலக அளவில் குணமடைந்தவர்களின் விகிதாச்சாரத்தில் கேரளம் முன்னிலையில் உள்ளது.

மார்ச் 27 அன்று மட்டும் 39 பேருக்கு நோய் கண்டறியப்பட்டு கோவிட் அச்சமூட்டியது. மார்ச் 30 இல் 32 பேருக்கு நோய் கண்டறியப்பட்டது. ஆனால் கவனமான திட்டமிடல் மற்றும் ஒற்றுமை மூலம், மறுவாழ்வுக்கு வழிபிறந்தது. மே 4 ஆம் தேதி ஒரே நாளில் 61 பேர் குணமடைந்தனர். அன்று புதிய தொற்று எதுவும் இல்லை. நோய் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஜனவரி 30 முதல் கேரளம் கடைப்பிடித்த முன்னெச்சரிக்கையும் தடுப்பு நடவடிக்கைகளும் நோயின் வரைபடக்கோடு சீராக தொடர உதவியது என முதல்வர் கூறினார்.

வெள்ளியன்று கேரளத்தில் ஒருவருக்கு மட்டுமே நோய் கண்டறியப்பட்டது. சென்னையிலிருந்து வந்த எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் இவர். பத்து பேர் குணமடைந்தனர். ஹாட் ஸ்பாட்டுகள் 33 ஆக குறைந்தது. மார்ச் முதல் வாரத்தில் இந்தியாவில் அதிக கோவிட் நோயாளிகள் கொண்ட மாநிலங்களில் கேரளம் முதலிடத்தில் இருந்தது. தற்போது மிக குறைவான கோவிட் நோயாளிகள் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக கேரளம் உள்ளது. ஏப்ரலில் கோவிட் நோயாளி இல்லை என அறிவித்த திரிபுராவில் தற்போது 86 கோவிட் நோயாளிகள் உள்ளனர். மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட சண்டிகரிலும் (113), லடாக்கிலும் (25), ஜம்மு காஷ்மீரிலும் (449) கேரளத்தைவிட அதிக நோயாளிகள் உள்ளனர். 19,063 நோயாளிகளுடன் மகாராஷ்டிரா முன்னலையில் உள்ளது. 16 நோயாளிகளுடன் கேரளம் 24 ஆவது இடத்தில் உள்ளது.