tamilnadu

img

நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.... 

தில்லி 
இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு 2-ஆம் கட்ட ஊரடங்கை கடைபிடித்து வருகிறது. இந்த ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

மே 4 முதல் தொடங்கும் இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீடிக்கிறது. மேலும் நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களை கொரோனா பரவலை பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என தரம் பிரிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தை பெற்றுள்ள மாவட்டத்தை தவிர மற்ற ஆரஞ்சு மற்றும் பச்சை தரத்தை மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட உள்ளன.  
 

;