tamilnadu

img

தாரிகாமியைக் கொணர உச்சநீதிமன்றத்தில் சிபிஎம் மனு

புதுதில்லி, ஆக.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினர் முக மது யூசுப் தாரிகாமியை ஒப்ப டைத்திட வேண்டும் என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச் சூரி உச்சநீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தி ருக்கிறார். இந்த மனு மீதான விசா ரணை திங்களன்று நடைபெறும் எனத் தெரிகிறது. நாடாளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சிதைத்து இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றிய நாளுக்கு முன்பிருந்தே, அம்மாநி லத்தை ராணுவம் மற்றும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மத்திய அரசு கொண்டுவந்துவிட்டது. அம்மாநிலத்தில் இயங்கிக் கொண்டி ருந்த அனைத்து எதிர்க்கட்சித் தலை வர்களையும் கைது செய்து பல்வேறு சிறைகளில் அடைத்து வைத்திருக்கி றது. அவர்களை எந்தச் சிறையில் வைத்திருக்கிறது என்றே தெரிய வில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பின ரும், காஷ்மீர் மாநில சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமி உடல்நலிவுற்றிருப்பதாகக் கேள்விப்பட்டு, அவருக்குத்  தேவை யான மருந்துகளை ஸ்ரீநகருக்கு கொண்டு சென்ற போதும், காவல் துறையினர் விமான நிலையத்திலி ருந்து வெளியே செல்ல விடாமல் அங்கேயே வைத்திருந்து திருப்பி அனுப்பிவிட்டனர். இந்நிலையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி அரசமைப்புச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ், காஷ்மீர் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், நான்கு முறை ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான, முகமது யூசுப் தாரிகாமியைக் கொணர்ந்திடவேண்டும் என்று கோரி, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு மீதான விசாரணை திங்களன்று நடை பெறும் எனத் தெரிகிறது. இதற்கிடையில் சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்கள் அனை வரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள காஷ்மீர் மக்களைப் பார்ப்பதற்காக ஸ்ரீநகர் நோக்கி சென்றனர்.

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, கே.எஸ். வேணுகோபால் (காங்கிரஸ்), சீத்தாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), து. ராஜா (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), திருச்சி சிவா (திமுக),மனோஜ் ஜா (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), தினேஷ் திரிவேதி (திரிணாமுல் காங்கிரஸ்), மஜீத் மேமன் (தேசியவாதக் காங்கி ரஸ்), குபேந்திர ரெட்டி (மதச்சார் பற்ற ஜனதா தளம்), சரத்யாதவ் (லோக் தந்திரிக் ஜனதாதளம்) ஆகியோர் சென்றனர். முன்னதாக சீத்தாராம் யெச்சூரி இதுபற்றி “காஷ்மீர் ஆளுநர், மாநி லத்தில் இயல்புநிலை திரும்பி யிருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் வந்து பார்க்கலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.  அதனையொட்டி அவரது அழைப்பிற்கு மதிப்பளித்து நாங்கள் இன்றையதினம் (சனி) ஸ்ரீநகர் செல்கிறோம்” என்று கூறி னார்.  

ஆளுநர் அவ்வாறு கூறியிருந்த போதிலும், ஜம்மு-காஷ்மீர் மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை, அரசியல் கட்சித் தலை வர்கள் ஸ்ரீநகருக்குள் வரக்கூடாது என்று வெள்ளி இரவு ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது அங்குள்ள மக்களுக்கு அசவுகரி யத்தை ஏற்படுத்தும் என்று அது மேலும் கூறியிருக்கிறது. காஷ்மீர் அரசாங்கம் முன்னுக்குப்பின் முர ணாக அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது என்று இது பற்றி காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்தார். “ஜம்மு-காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது என்று அரசாங்கம் சொல்கிறது. பின் ஏன், தலைவர்களை மாநிலத்திற் குள் நுழைய அனுமதிக்க மறுக்கி றீர்கள்? உமர் அப்துல்லா, மெஹ பூபா முப்தி, பரூக் அப்துல்லா ஆகி யோரை ஏன் வீட்டுக்காவலில் வைத்திருக்கிறீர்கள்? இயல்பு நிலை திரும்பிவிட்டது என்பது உண்மை யானால் அவர்களை ஏன் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறீர்கள், எங்க ளைச் சந்திக்க விடாமல் ஏன் தடுக்கி றீர்கள்?” என்று குலாம் நபி ஆசாத் கேட்டார்.   400க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் இன்னமும் வீட்டுக்காவ லில் இருக்கின்றனர் எனத் தெரி கிறது. மாநிலத்தின் பல இடங்களில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. (ந.நி.)

‘உரிமைகள் பட்டப்பகலில் சூறை’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

புதுதில்லி, ஆக. 24- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சென்ற எட்டு அரசியல் கட்சித் தலைவர்களை, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் மாநிலத்திற்குள் அனுமதிக்க மறுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சென்ற காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, தேசியவாதக் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய எட்டுக் கட்சித் தலைவர்களை  ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் மாநிலத்திற்குள் அனுமதிக்க மறுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இக்கட்சிகளின் கூட்டுத் தூதுக் குழுவினர் இன்று (சனிக்கிழமை) காலை ஸ்ரீநகருக்குச் சென்றிருந்தனர். அரசமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஜம்மு-காஷ்மீர் மக்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வரு வதற்காக சென்றிருந்தனர். தூதுக்குழுவினர் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் அடுத்த சில தினங்க ளில் சென்று, பல்வேறுபட்ட மக்களையும் சந்தித்து, பல்வேறுபட்ட அரசியல் கருத்து உள்ளவர்களிடமும் கருத்துக்கள் கோரவும், மக்கள் படும் சிரமங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும்  திட்டமிட்டிருந்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நன்கு அறிந்த தலைவர்களையே அனு மதிக்க மறுத்திருப்பது  அரசியல் கட்சிகளின் மீது ஏவப்பட்டுள்ள அப்பட்டமான தாக்கு தலாகும். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை யினர் நடந்து கொண்டுள்ள விதமும் பத்திரிகை சுதந்திரத்தைப் பறித்திடும் விதத்தில் அப்பட்டமான முறையில் நடந்திருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் “இயல்பு” வாழ்க்கைத் திரும்பிவிட்டது என்று அரசாங்கத்தின் தரப்பில் சொல்லப்படு வது உண்மை எனில், பின் ஏன் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை போகவிடாமலும் மக்களைச் சந்திக்கவிடாமலும்  தடுத்து நிறுத்தி இருக்கிறீர்கள்?  மக்களின் ஜன நாயக உரிமைகள் காலில்போட்டு மிதிக்கப்படுவதைவும், நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களையே அனுமதிக்க மறுத்திருப்பதையும், இவ்வாறு சர்வாதிகார ஆட்சி திணிக்கப்பட்டிருப்பதை நாட்டுமக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.   இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.