tamilnadu

img

இந்தியாவில் ஒரே நாளில்  24,248பேருக்கு கொரோனா தொற்று

சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் தினசரி அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் வைரஸின் பரவல் மின்னல் வேகத்தில் தான் உள்ளது. குறிப்பாக பொதுமக்கள் மட்டுமல்லாது அரசுத்துறை உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 8 எம்எல்ஏ-க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அமைச்சர் கே.பி. அன்பழகனும் அடங்கும். 

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், ஆலந்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வுமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.