புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸால் 67,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லியை விட இப்போது தமிழகத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை நாட்டின் தலைநகரான தில்லியை விட அதிகமாக உள்ளது. திங்கட்கிழமை காலை எட்டு மணி நிலவரப்படி இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 67,152- ஆக உள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 2,206 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 7,204 ஐ எட்டியுள்ளது, அதே நேரத்தில் மாநிலத்தில் செயலில் உள்ள கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 5,195 ஆக உள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி மகாராஷ்டிராவில் 22,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 8,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. தமிழகத்தில் தொற்று பரவல் 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 13 வயது முதல் 60 வயது வரை பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6,327 ஆக உள்ளது. இதில் ஆண்கள் 4,255 பேர். பெண்கள் 2080 பேர்.