tamilnadu

img

கர்நாடக வேளாண்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று...

பெங்களூரு 
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த ஒருவாரமாக கொரோனா பரவல் புதிய உச்சத்தில் உள்ளது. இன்று மாலை நிலவரப்படி அங்கு 1.12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,147 பேர் பலியாகியுள்ள நிலையில், 42,901 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில் அம்மாநில வேளாண்துறை அமைச்சர் பி.சி. பாட்டீலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். மேலும் அவரது மனைவி மற்றும் மருமகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பி.சி. பாட்டீல் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

ஏற்கெனவே அம்மாநில வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், சுற்றுலாத் துறை அமைச்சர் ரவி ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். 

;