tamilnadu

img

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 20 ஆயிரத்தை தொட்டது....

புதுதில்லி
இந்தியாவில் புதன்கிழமை மாலை ஐந்து மணி நிலவரப்படி 20,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,960 பேர் குணமடைந்துள்ளனர். 652 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிபட்சமாக மகாராஷ்டிராவில் 5,221 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 251 ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் 2,156 பேரும், குஜராத்தில் 2,272 பேரும், இராஜஸ்தானில் 1,801 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் 1,596 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 1,592 பேரும்,  உத்தரப்பிரதேசத்தில் 1,492 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ஆயிரம் எண்ணிக்கையை தாண்டிய பட்டியலில் எழு மாநிலங்கள் உள்ளன. ஆயிரத்தை நெருங்கம் மாநிலங்களில் அடுத்த இடத்தில் தெலுங்கானா உள்ளது. இங்கு 945 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேசத்தில் 813 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

;