புதுதில்லி:
மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வி.முரளீதரன் மீதான புகார் குறித்து தலைமை விஜிலென்ஸ் அதிகாரி விசாரிப்பார்.லோக் தந்த்ரிக் யுவஜனதா தள தேசியத் தலைவர் சலீம் மாதவூரின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தஉத்தரவை மத்திய விஜிலென்ஸ் ஆணையம் வெளியிட்டது.அபுதாபியில் நடந்த18 நாடுகளின் வெளியுற வுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பி.ஆர் ஏஜென்சியைச் சேர்ந்த இளம் பெண் கலந்து கொண்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதில் அமைச்சர், நெறிமுறைகளை மீறியதாக பிரதமரிடம் புகார் அளிக்கப் பட்டது.