tamilnadu

img

‘கடைந்தெடுத்த கூட்டுக் களவாணிகள்’

புதுதில்லி, ஏப்.29- கொரோனா துயரத்தால் இந்திய தேசத்தின் ஏழை - எளிய மக்கள் துன்பத்தின் உச்சத்தில் உழன்று கொண்டிருக்கும் போது, பெருவாரியான பணத்தை அள்ளிக் கொண்டு நாட்டை விட்டு ஓடிப்போன ‘மெகுல்பாய்’-ன் நலன்களும் தனது கூட்டுக் களவாணி நண்பர்களின் நலன்களும்தான் பிரதமர் மோடிக்கு முக்கிய மாக போய்விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடுமையாக சாடியுள்ளார்.

இந்திய பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திரும்பித் தராத 50 கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் கடன் தொகை வராக்கடன் என்று கூறி மேலும் ரூ.68,607 கோடியை இந்திய ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்திருப்பது தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சமூக செயற்பாட்டாளர் சாகேத் கோகலே எழுப்பிய கேள்விகளுக்கு கிடைத்த பதிலின் மூலம் தெரியவந்துள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களில் முதன்மையானவர், ஏற்கெனவே பல்லாயிரம் கோடியை சூறையாடிவிட்டு நாட்டை விட்டு ஓட்டம் பிடித்து தற்போது ஆண்டிகுவா தீவில் வசிக்கும் மெகுல் சோக்சி ஆவார். இவரது நிறுவனத்திற்கு ரூ.5,492 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவரும், இவரது மருமகன் நீரவ்மோடியும் பிரதமர் நரேந்திரமோடியின் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் உள்பட பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு மிகப் பெரிய தொகை தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை கடுமை யாக கண்டித்துள்ள சீத்தாராம் யெச்சூரி, இந்த மோசடி பேர்வழி மெகுல்பாயைத்தான் பிரதமர் மோடி தனது இல்லத்திற்கே வரவழைத்து வரவேற்பு கொடுத்தார்; அதன்பின்னர்தான் மெகுல்பாய் வங்கியை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டிற்கு ஓடிபோனார்; இப்போது மெகுல்பாய்க்கு மீண்டும் கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள்; ஊர டங்கால் வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்து தவிக்கும் ஏழைகளுக்கு செலவிட மோடி அரசிடம் பணமில்லை; ஆனால் மெகுல்பாய்களுக்கு தள்ளுபடி செய்ய பண மிருக்கிறது. இவர்கள் மோசடியிலும் கடைந்தெடுத்த மோச டிக்காரர்கள்; இவர்கள் துயரத்திலும் லாபம் பார்க்கும் கொடூர மான கூட்டுக்களவாணிகள் என்று கடுமையாக சாடியுள்ளார்.