tamilnadu

img

வாழ்விழந்து வெளியேறிய 4 லட்சம் தொழிலாளர்

சூரத்தில் 9 ஆயிரம் வைரத் தொழிற்சாலைகள் மூடல்

சூரத், ஜூலை 10 - கொரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்ட முதல் 5 மாநிலங்களில் குஜ ராத்தும் ஒன்று. இதுவரை 38 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,993 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்று, மார்ச் மாதம் பரவத் தொடங்கிய உடனேயே குஜராத்தின் முக்கியத் தொழில்கள் பலவும் முடங்கின. குறிப்பாக, சூரத்தையொட்டிய பகுதியில் வைரம் பட்டைத் தீட்டும் 9 ஆயிரம் தொழிற் சாலைகள் மூடப்பட்டன. இந்த தொழிற் சாலைகளில் பணியாற்றி வந்த சுமார் 6 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்தனர். அவர்கள் 100 நாட்களுக்கும் மேலாக பட்டினி யிலும் பசியிலும் கடும் சிரமத்தைச் சந்தித்து வந்தனர்.  இந்நிலையில், சூரத் நகரை விட்டே அவர்கள் கூட்டம் கூட்டமாக தற்போது வெளியேறத் துவங்கியுள்ளனர். நாளொன் றுக்கு சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் என்ற அளவில், சூரத்தை விட்டு அவர்கள் வெளியேறிக் கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

“ஜூலை 13-ம் தேதி வரை தொழிற்சாலை களை மூட சூரத் மாநகராட்சி நிர்வாகம் உத்த ரவிட்டுள்ளது. இதனால் வருமானம் இல்லா மல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் சூரத்திலிருந்து வெளியேறி வரு கின்றனர். ஏறக்குறைய 70 சதவிகிதம் தொழி லாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டார்கள். இவர்கள் திரும்பி வருவார் களா என்று உறுதியாகக் கூற முடியாது” என்று சூரத் வைரம் பட்டை தீட்டும் தொழி லாளர்கள் அமைப்பின் தலைவரான ஜெய் சுக் கஜேரியா என்பவர் தெரிவித்துள்ளார். சூரத் சொகுசுப் பேருந்து உரிமையா ளர்கள் அமைப்பின் தலைவர் தினேஷ் அந்தான் அளித்துள்ள பேட்டியில், “நாள் தோறும் 300 சொகுசுப் பேருந்துகள், ஏறக் குறைய 6 ஆயிரம் பயணிகள் சூரத்திலி ருந்து புறப்படுகிறார்கள். இவர்கள் பெரும் பாலும் வைரத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். “வழக்கமாக இதுபோன்ற மக்கள் கூட் டத்தை நாங்கள் தீபாவளி நேரத்தில்தான் பார்ப்போம்” எனவும் அவர் தெரிவித்துள் ளார். சூரத் மாநகராட்சி ஆணையர் பன்ச்சா நிதி பானியும், தொழிலாளர்கள் இங்கிருந்து வெளியேறுவதை ஒப்புக் கொண்டுள்ளார். அதேநேரம், எண்ணிக்கை தெரியவில்லை என்று அவர் மழுப்பியுள்ளார்.