திருவனந்தபுரம்:
சிவசங்கரை கைது செய்வதைத் தடுக்க மாநில அரசு முயற்சி என்கிற ஊடக செய்தி ஆதாரமற்றது- தீய உள்நோக்கம் கொண்டது என கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர் கூட்டத் தில் முதல்வர் மேலும் கூறியதாவது:
ஒரு குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் எவரையும் விசாரிக்கவும்,கைது செய்யவும் மத்திய நிறுவனங்களுக்கு அதிகாரம் உண்டு. சட்டப்படி யாரும் அதைத் தடுக்கவோ, தலையீடு செய்யவோ முடியாது. ‘சிவசங் கரை கைது செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று மாநில அரசு பிடிவாதமாகஉள்ளது’ என்பது செய்திகளில் உள்ள ஒரு குற்றச்சாட்டு. அரசாங்கத்தின் மீதுகுற்றம் சாட்ட வேண்டும் என்றாலும் அந்த குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்குஅபத்தமானவை என்பதை இந்த ஊடகத்துக்கு பொறுப்பு வகிப்போர்தான் சரிபார்க்க வேண்டும் என்று கூறினார். ஒருவரை கைது செய்ய மத்தியபுலனாய்வு அமைப்பு முடிவு செய்தால்,அதை மாநில அரசால் தடுக்க முடியுமா? சிவசங்கர் கைது செய்யப்படுவதைத் தடுக்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்பதும் கற்பனையானது. ஊடக செய்திகளின்படி புரிந்துகொண்டது, சிவசங்கரை சுங்கத்துறையினர்தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்பதாகும். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவ
சங்கர் அங்குள்ள மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இதை அரசாங்கத்தால் தடுக்க முடியுமா? மருத்துவமனையில் ஒரு நபரை அனுமதிப்பதும் விடுவிப்பதும் ஒரு மருத் துவ நடவடிக்கை. அரசாங்கத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிற அடிப்படை அறிவுகூட இல்லை என்பதை அல்லவா இந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது.
சிவசங்கர் கைது செய்யப்பட்டால், அரசாங்கம் ஒரு பெரிய நெருக்கடியைஎதிர்கொள்ளும் என்கிற விளக்கத்தின்மூலம் இந்த செய்தியின் கெட்ட உள்நோக்கம் தெளிவுபடுத்தப்படுகிறது.எந்தவொரு நபரும் தவறு செய்திருந்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். தனது பதவிக்கு பொருந்தாத உறவு சிவசங்கருக்கு இருப்பதைக் கண்டவுடன் ஒருநிமிடம்கூட தாமதிக்காமல் அவர் முதல்வரின் செயலாளர்பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். பின்னர் தலைமைச் செயலாளர் மட்டத்தில் விசாரணை நடத்தி சஸ்பெண்ட்செய்யப்பட்டார். இந்த நபருக்கு இப்போது முதல்வர் அலுவலகத்துடனோ அல்லது அரசாங்கத்துடனோ எந்த தொடர்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். எனவேதான், புலனாய்வு அமைப்புகள் தங்கள் வழியில்செல்ல எந்த தடையும் இல்லை.
சிவசங்கரின் கைதுக்கான சுங்கத்துறை நகர்வு
‘நிழல் போரில் மத்திய மாநில அரசுகள்’ என்கிற தலைப்பில் செய்தி இருந்தது. தங்கக் கடத்தல் வழக்கின் ஆரம் பத்தில் இருந்தே விசாரணைக்கு மாநிலஅரசு ஒத்துழைத்து வருகிறது. இது தொடர்பாக மூன்று விசாரணை அமைப்புகளும் இதுவரை எந்த புகாரும் கூறவில்லை. சுதந்திரமான- நியாயமான விசாரணை நடத்தி அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பம். ஏனென்றால், நாட்டின் பொருளாதார பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு கடுமையான குற்றம் செய்யப் பட்டுள்ளது.தூதரக பார்சல்கள் மூலம் நடந்தஇந்த கள்ளக்கடத்தலின் வேர்களைக்கண்டுபிடித்து குற்றவாளிகள் அனைவரையும் நீதிமன்றத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே விரிவான விசாரணை நடத்தக்கோரி மாநிலஅரசு பிரதமருக்கு கடிதம் எழுதியது. அதற்கேற்ப விசாரணை முன்னேறி வருகிறது. இந்த வழக்கின் பெயரில் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களின் ஒரு பகுதியினரும் அரசாங்கத்திற்கு எதிராக ஏற்படுத்திவரும் புகைமூட்டத்தை அகற்ற விசாரணை நல்லநிலையில் முடிக்கப்பட வேண்டும்.மாநில அரசு கேட்டுக் கொண்டபடி மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்துகையில், லைப் திட்டத்தில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் சென்றதற்கு அரசின் மீது அந்த செய்தி குற்றம் சாட்டுகிறது. தங்கக் கடத்தல் விசாரணைக்கும் லைப்-இல் சிபிஐ விசாரிப்பதற்கும்எந்த தொடர்பும் இல்லை. வெளிநாட்டு பங்களிப்பு கட்டுப்பாட்டு சட்டத்தை (எப்சிஆர்ஏ) மீறியதாக குற்றம்சாட்டி சிபிஐ வழக்கு பதிவு செய்துள் ளது.
லைப் திட்டத்திற்கு இந்த சட்டம் பொருந்தாது என்று அரசாங்கம் வாதிட்டது. அரசாங்கத்திற்கு எந்தவொரு வெளிநாட்டு நிதியும் கிடைக்கவில்லை என்றும், லைப் மிஷன் எப்சிஆர்ஏ-வின் கீழ் வராது என்றும் உயர் நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. மீதமுள்ளதை வழக்கின் இறுதித் தீர்ப்புக்குபிறகு கூறலாம். லைப் திட்டத்தையும் தங்கக் கடத்தல் வழக்கையும் இணைக்கும் முயற்சியின் பின்னணியில் என்ன இருக்கிறது என்று சொல்லத்தேவையில்லை என்றும், மக்கள் அதைசரியாகப் புரிந்து கொண்டார்கள் என் றும் முதல்வர் கூறினார்.