இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் கேட்டு தீபாவளியன்று தொழிலாளர் வீடுகளில்கருப்புக்கொடி ஏற்றுவது, ஆலை முன்பு கருப்புக் கொடி கஞ்சித் தொட்டி திறப்பது, நவம்பர் 18-ஆம் தேதி ஆலைமுன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.இது தொடர்பான கூட்டத்தில் அரசு உப்பு நிறுவனத்தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி மற்றும் உப்பு நிறுவன சங்க நிர்வாகிகள் கே.பச்சமால், குமரவடிவேல் உள்ளிட்டோர் கவந்து கொண்டனர்.