tamilnadu

img

மருமகளை வல்லுறவுக்கு உள்ளாக்கிய பாஜக எம்எல்ஏ

புதுதில்லி:
மருமகளை மிரட்டி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக, தில்லியைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தில்லி நாங்லோய் சட்டமன்றத் தொகுதியில், பாஜக சார்பில் 2 முறைஎம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மனோஜ் ஷோகீன். இவர்தான்,அவரது மருமகள் மீரா பகத் என்பவரை துப்பாக்கி முனையில் மிரட்டி வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட மீரா பகத்,நீண்ட தயக்கத்திற்குப் பிறகு, கடந்தவியாழக்கிழமையன்று மனோஜ் ஷோகீன் மீது புகார் அளித்துள்ளார்.2018 டிசம்பர் 31ஆம் தேதி இரவு இக்கொடுமை நடந்ததாகவும், தனதுமாமியாரே இதற்கு உடந்தையாக இருந்தார் என்றும் புகாரில் மீரா குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “நடந்ததை வெளியே சொன்னால், உனது சகோதரனை கொலை செய்து விடுவோம்” என்று மிரட்டப்பட்டதாலும், அத்துடன் எதிர்காலத்தை நினைத்து அஞ்சியும் அப்போது புகார் அளிக்கவில்லை என்று கூறியுள்ள மீரா, தற்போதும் கூட, தனது தாயையும், தந்தையையும் ஷோகீனின் ஆட்கள் அடித்து துன்புறுத்தியதாலேயே புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.தற்போது மீரா பகத் அளித்த புகாரின் பேரில், பாஜக முன்னாள் எம்எல்ஏஷோகீன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 மற்றும் 506 ஆகியபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.