tamilnadu

img

பெண்களைக் கேலி செய்தவருக்கு பாஜக எம்எல்ஏ பாதுகாப்பு..... காவல்நிலையத்திற்குள் புகுந்து அழைத்துச் சென்றார்

லக்மிபூர்:
பெண்களைக் கேலிசெய்த வழக்கில் லாக்-அப்பில் அடைக்கப்பட்டிருந்த நபரை, உ.பி. பாஜகஎம்எல்ஏ ஒருவர், காவல் நிலையத்திற்கு உள்ளேயே புகுந்து திறந்துவிட்ட சம்பவம் நடந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், லக்மிப்பூர் பகுதியில் உள்ளது முகமதி காவல் நிலையம். இங்கு பாஜக தொண் டர் ஒருவர் பெண்களைக் கேலி செய்ததற்காக கைதுசெய்யப்பட்டு லாக் - அப்பில்அடைக்கப்பட்டு இருந்துள் ளார்.

இந்நிலையில், அந்த தொகுதி பாஜக எம்எல்ஏ-வான லோகேந்திர பிரதாப் சிங் மற்றும் அவரது மகன்உள்ளிட்டோர், நள்ளிரவில்தங்களது ஆதரவாளர்களுடன் காவல்நிலையத்துக் குள் புகுந்து, அந்த பாலியல்குற்றவாளியை சட்டவிரோதமாக வெளியே அழைத்து வந்துள்ளனர்.முன்னதாக, எம்எல்ஏ லோகேந்திரா, அவரது மகன் மற்றும் தொண்டர்கள் காவல்துறையினரை மிரட்டிலாக்-அப் சாவியைப் பறித்துள்ளனர். அத்துடன் காவல்துறையினர் எவ்வளவோ தடுத்தும், அதை கொஞ்சமும் மதிக்காமல் அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர். குற்றவாளியையும் கையோடு அழைத்துச் சென் றுள்ளனர்.இந்தக் காட்சிகள் தற்போது சமூகவலைதளங் களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப் பட்ட பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் பலர்கருத்துக்களைப் பதிவிட் டுள்ளனர்.ஏற்கெனவே, ஹத்ராஸ் தலித் இளம்பெண் பாலியல் வன்கொலை வழக்கிலும் குற்றவாளிகளைக் பாதுகாக்க பாஜக-வினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.