tamilnadu

img

பெண் போலீஸ் அதிகாரியை மிரட்டிய பாஜக எம்எல்ஏ கைது!

நாக்பூர், அக்.2- பெண் காவல்துறை அதிகாரியை, தரக் குறைவாகப் பேசிய சம்பவத்தில், மகா ராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏ கைது செய் யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரத்தின் தும்சார் தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் சரண் வாக்மரே. பாஜக-வைச் சேர்ந்த இவர், கடந்த செப் டம்பர் 16-ஆம் தேதி தொழிலாளர்களுக்கு கட்டுமானப் பொருட்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். அப்போது, அங்கே பணியில் இருந்த காவல்துறை பெண் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாக்மரே, ஒருகட்டத்தில் அதி காரியை அவமானப்படுத்தும் வகையில் தரக்குறைவாக பேசி மிரட்டலும் விடுத் துள்ளார். இதனால், அச்சத்திற்கும் மன உளைச்ச லுக்கும் உள்ளான பெண் அதிகாரி, தும்சார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு வாக்மரே மீது 353 (அரசு ஊழி யரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல்), 354 (பெண்ணின் கண்ணியத்தைக் குலைக் கும் வகையில் நடந்து கொள்ளுதல்), 506 (அச்சுறுத்தல் விடுத்தல்) ஆகிய சட்டப் பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது.  இந்தப் பின்னணியில், எம்எல்ஏ சரண் வாக்மரே, தற்போது கைது செய்யப்பட் டுள்ளார்.