திருவனந்தபுரம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் ஊழியர்களை கொலை செய்வதன் மூலம் எங்கள்செயல்பாட்டை கட்டுப்படுத்தும் வன்முறை அரசியல் கலாச் சாரத்தை கைவிட பாஜகவும்காங்கிரசும் முன்வர வேண்டும் என சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பால கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: திருச்சூர் மாவட்டம் புதுசேரி சிபிஎம் கிளைசெயலாளர் தோழர் சனூப், திரிசூர் அருகே உள்ள குன்னம்குளத்தில் ஆர்எஸ்எஸ் குண்டர்களால் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். அவருடன் வந்த மற்ற மூன்று சிபிஎம்ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர்.26 வயதான சனூப். இந்த நாட்டின் இதயத்துடிப்பைப் போல தீவிரமாக செயல்படும் கட்சி கிளை செயலாளர். உடன்பிறப்புகள் இல்லாத இந்த இளைஞனின் பெற்றோர் அண்மையில் இறந்தனர். கட்சி வித்தியாசம் இல்லாமல் புதுசேரி மக்கள் அனைவரும் சனூப்பின் மனித நேயத்தை அங்கீகரித்தனர். எப்போதும் மக்களுடன் இருந்த அந்த இளைஞன் அனைவரையும் நேசித்தான். அதனால்தான் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் அவரைக் கொன்றனர். ஆர்எஸ்எஸ்/ பாஜக-காங்கிரஸ் சித்தாந்தத்தின் ஒரு பகுதியாகவே கேரளத்தில் சிபிஎம்ஊழியர்கள் கொல்லப்படுகின்றனர். கடந்த சில நாட்களில், இந்த சம்பவத்தோடு 4 சிபிஎம் ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குன்னம்குளத்தில், தோழர் சனூப்பின் படுகொலைக்கு சங் பரிவார் குழு ஒன்று தலைமை தாங்கியது. காங்கிரசின் தீவிர உறுப்பினராக இருந்து தற்போது பாஜகவில் சேர்ந்த ஒரு நபர் உள்ளிட்ட கும்பலாகும் .பாஜகவும் காங்கிரசும் குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டன. அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அரசியல் எதிரிகளை ஒழிக்க குற்றப்பின்னணி கொண்ட நபர்களைப் பயன்படுத்துகிறார்கள். அதற்கான சதித் திட்டம் தீட்டப்படுகிறது.நாட்டின் அமைதியைக் குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் / பாஜக-காங்கிரஸ் ஊழியர்கள்கொலைக் கத்தியை கைவிடத் தயாராக வேண்டும். சிபிஎம் ஊழியர்களின் மன உறுதிக்கு கொலை பாதகச் செயல்கள் மூலம்சவால் விடுக்கும் வன்முறை அரசியலை கைவிட வேண்டும். துணிச்சலான தியாகி தோழர் சனூப் அவர்களுக்கு அஞ்சலி. லால் சலாம். இவ்வாறு கொடியேரி கூறினார்.